மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைலாசநாதர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News image
கும்பாபிஷேகம்
Updated On :14 ஜூலை 2025, 6:32 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் அமைந்துள்ளது அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி குரு கோயில் கடந்த நான்கு மாதங்களாக மகா கும்பாபிஷேக விழாவிற்கான திருப்பணிகள் தொடங்கியது.

தொடர்ந்து தொய்வின்றி திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெற்ற நிலையில் , மூலவர், கைலாசநாதர் , அகிலாண்டேஸ்வரி மற்றும் நாகினி என 13 யாக குண்டங்கள், 26 சிவாச்சாரியார்கள் , 9 ஓதுவார் மூர்த்திகள் என சிறப்புடன் பத்தாம் தேதி காலை 9 மணியளவில் மங்கள இசையுடன் கணபதி பூஜை செய்து சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேக விழாவினை துவங்கினர்.

கடந்த மூன்று நாள்களாக மூன்று கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 9 மணி அளவில் பூர்ணாகுதி நிறைவு பெற்றது.

இதனைத் தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்ற மூலவர் தட்சிணாமூர்த்தி கைலாசநாதர் மற்றும் அகிலாண்டேஸ்வரி ஆகிய விமான கோபுரங்கள் மற்றும் பரிவார மூர்த்திகள் கோபுரங்கள் என அனைத்திற்கும் சிவாச்சியாளர்கள் வேதம் முழங்க சிவ வாத்தியங்கள் வான வேடிக்கையுடன் புனித நீர் விமானங்களுக்கு ஊற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளுக்கும் சிறப்பு கும்பாபிஷேக நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் , எழிலரசன், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் குமரதுரை , துணை ஆணையர் ஜெயா, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர்கள் கதிரவன், செந்தில்குமார், திமுக நிர்வாகிகள் , முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்ட பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கில் திரண்டு மகா கும்பாபிஷேக விழாவினை கண்டு ரசித்து இறையருள் பெற்றனர்.

summary

The consecration ceremony of the Kailasanathar and Dakshinamurthy temples along with Akilandeswari was held.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.