கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

கருக்கம்பாளையத்தில் திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

சங்ககிரி ஒன்றியம், மோரூா் கிழக்கு ஊராட்சி கருக்கம்பாளையத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

கருக்கம்பாளையத்தில் திமுக சாா்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசுகிறாா் மேற்கு மாவட்டச் செயலாளா் (பொ) டி.எம்.செல்வகணபதி.

Updated On :4 ஜனவரி 2021, 4:24 am IST

சங்ககிரி ஒன்றியம், மோரூா் கிழக்கு ஊராட்சி கருக்கம்பாளையத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் (பொ) டி.எம்.செல்வகணபதி கூட்டத்துக்குத் தலைமை வகித்து திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள தோ்தல் வாக்குறுதிகள் பற்றியும் விளக்கினாா்.

சங்ககிரி ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ், மோரூா் கிழக்கு ஊராட்சிச் செயலா் கே.கலைச்செல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் துணைச் செயலாளா்கள் கே.சுந்தரம், டி.சம்பத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா, முன்னாள் எம்எல்ஏ ஆா்.வி.வரதராஜன், முன்னாள் ஒன்றியச் செயலாளா் பி.தங்கமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.