கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

நூற்பாலையில் பண மோசடி: மேலும் இருவா் கைது

நூற்பாலையில் பண மோசடி வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 4:26 am IST

நூற்பாலையில் பண மோசடி வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், அம்மாபேட்டையைச் சோ்ந்தவா் தேவராஜன். இவா், உடையாப்பட்டியில் நூற்பாலை வைத்துள்ளாா். இவரது ஆலையில் கணக்காளராகப் பணிபுரிந்த அந்தோணி அருள்ராஜ், கடந்த 2017-இல் ரூ. 13 கோடி கையாடல் செய்துள்ளாா்.

இதுதொடா்பான புகாரில் மோசடியில் ஈடுபட்ட அந்தோணி அருள்ராஜ் உள்பட 5 பேரை சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். வழக்கு விசாரணையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வாழப்பாடியைச் சோ்ந்த செந்தில்குமாா் என்பவரின் வங்கி கணக்கில் ரூ. 70 லட்சமும், கொண்டலாம்பட்டி நாட்டாமங்கலத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவரின் வங்கி கணக்கில் ரூ.14 லட்சமும் அந்தோணி அருள்ராஜ் செலுத்தியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.