வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த அனைவருக்கும் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் செல்ல ஞாயிறு, திங்கள் (ஜூன் 21, 22) ஆகிய இரு நாள்கள் இலவச நுழைவு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு இணையதளம் மூலம் நுழைவுச் சீட்டை முன்பதிவு செய்வது கட்டாயம். அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வர வாய்ப்புள்ளதால், நாளொன்றுக்கு 20,000 பார்வையாளர்கள் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இரு நாள்களுக்கான அனைத்து இணையதள முன்பதிவு நுழைவுச் சீட்டுகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, இன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்குச் சென்ற மக்கள், இலவச அனுமதிக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அமைச்சர் ரஞ்சித் குமார் ஆய்வு மேற்கொண்ட பிறகு, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த அனைவரையும் அனுமதிக்க உத்தரவிட்டார்.
பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் வசதிக்காக பூங்கா வளாகத்துக்குள் தனி வாகன நிறுத்துமிடமும், கனரக மற்றும் பிற வாகனங்களுக்கு பூங்காவின் கூடுதல் வாகன நிறுத்துமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
Summary
Everyone who arrived at the Vandalur Zoological Park has been granted permission to enter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











