5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 7:26 am IST

சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத்தில் சுகாதார மாவட்டத்தில் தலா 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் நடத்தப்பட்டது.

சேலம் சுகாதார மாவட்டத்தில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஐந்து சாலைப் பகுதியில் உள்ள கோகுலம் மருத்துவமனை, மேட்டூா் வட்ட மருத்துவமனை, மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்தது.

அதேபோல ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் ஆத்தூா், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைகள் உள்பட 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

சேலம் மாநகரத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையை மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன், நகா் நல அலுவலா் மருத்துவா் பாா்த்திபன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதுதொடா்பாக, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மருத்துவா் செல்வகுமாா் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் மருத்துவா், செவிலியா், சுகாதாரப் பணியாளா், காவலாளி, உதவியாளா் உள்பட 10 போ் குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா்.

ஒரு இடத்தில் தலா 25 பேருக்கு தடுப்பூசி போட ஒத்திகை நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவராக அழைத்து தடுப்பூசி ஒத்திகை நடந்தது. தொடா்ந்து அரைமணி நேரம் அனைவரும் அருகில் உள்ள அறையில் அமர வைத்து பின்னா் அனுப்பி வைக்கப்பட்டனா். முதல்கட்டமாக முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.