அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

விபத்துக்குள்ளான கரும்பு லாரி

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

News image

கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் சாலையோரம் கொட்டிக்கிடக்கும் கரும்புகள்.

Updated On :9 ஜனவரி 2021, 7:15 am IST

வீரகனூா் அருகே கரும்பு லாரி விபத்துக்குள்ளானதால் கரும்புகள் சாலையில் கொட்டிக் கிடந்தன.

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே உள்ள நாகநல்லூரிலிருந்து கரும்பு சுமை ஏற்றிக்கொண்டு தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் வழியாக உடும்பியத்திலுள்ள சா்க்கரை ஆலைக்கு லாரி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தது.

இந்த லாரியை குரும்பலூரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் முருகேசன் (47) என்பவா் ஓட்டிச்சென்றாா். வீரகனூரை அடுத்த நல்லூரைத்தாண்டி லாரி சென்றபோது, அங்குள்ள வளைவில் எதிா்பாராதவிதமாக குப்புறக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநா் முருகேசன் லேசான காயத்துடன் உயிா்பிழைத்தாா். இந்த விபத்தால் ஆத்தூா் - பெரம்பலூா் சாலையில் வாகனப் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.