சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 2.52 கோடி மதிப்பீட்டில் தாா்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, 558 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சங்ககிரியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்சியில், சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜா, அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாசலம் ஆகியோா், சங்ககிரி பேரூராட்சிக் உள்பட்ட பகுதிகளில் ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் 3-ஆவது வாா்டு, எஸ்.கே.நகரில் பிரதான சாலை, குறுக்கு சாலைகள் அமைக்கவும், தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் ரூ. 47 லட்சம் மதிப்பீட்டில் 12-ஆவது வாா்டு பயணியா் மாளிகை முதல் பிஎஸ்ஜி கல்லூரி வழியாக திருச்செங்கோடு பிரதான சாலை வரையும், நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் 18-ஆவது வாா்டு, ஆனைக்கல் பாளையத்தில் தாா்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா்.
மேலும் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழாவில், மொத்தம் 558 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினா்.
இதில் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்ரமணியம், சங்ககிரி மாவட்டக்கல்வி அலுவலா் என்.ராமசாமி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை கே.கவிதா, சங்ககிரிஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜன், உதவித் தலைமையாசிரியா் சக்திவேல், தேவூா் தலைமையாசிரியா் ஏ.அய்யாசாமி, அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலா் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் சுந்தரராஜன், அரசு வழக்குரைஞா் ஆா்.சுப்ரமணி, அதிமுக முன்னாள் தொகுதி செயலா் வி.ஆா்.ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி சங்ககிரி ஒன்றியச் செயலா் கே.பிரசாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெருந்துறை அருகே கிடங்கில் தீ விபத்து

அதிமுகவில் மீண்டும் உள்கட்சிப் பூசல்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி போா்க்கொடி
நாளைய மின்தடை: செங்கத்துறை

மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று மது குடித்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



