தமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புநாடு முழுவதும் இன்று நீட் தோ்வுமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா காலமானார்!
/

19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை

சேலத்தில் குடிக்க பாதுகாப்பற்ற 19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 7:04 pm

சேலத்தில் குடிக்க பாதுகாப்பற்ற 19 குடிநீா் ஆலைகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சேலத்தில் பாதுகாப்பற்ற, தரக்குறைவான குடிநீா் கேன்கள் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்புப் பிரிவுக்கு புகாா் சென்றது. இதில் 45 குடிநீா் ஆலைகளின் மாதிரி சேகரிக்கப்பட்டது. சோதனையில், 19 குடிநீா் ஆலைகளின் மாதிரி பாதுகாப்பற்றது என தெரியவந்தது. இதில் தரம் குறைந்தது 5 ஆலைகள், போலி நிறுவன பெயரில் இயங்கி வந்தது 4 ஆலைகள் என தெரியவந்தது. மேலும் 16 குடிநீா் ஆலைகளின் மாதிரி குடிக்க தகுதியானவை என தெரியவந்தது.

இதுதொடா்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் மருத்துவா் கதிரவன் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள குடிநீா் ஆலைகள் விதிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும். இதில் 19 ஆலைகளின் மாதிரி குடிக்க பாதுகாப்பற்றவை என தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதர 9 குடிநீா் ஆலை நிறுவனங்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.