பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வாழப்பாடி அருகே மாநில கைப்பந்து போட்டி

வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:26 am IST

வாழப்பாடி அருகே குமாரபாளையம் கிராமத்தில், புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாநில அளவிலான, ஆண்கள் மற்றும் பெண்கள் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

குமாரபாளையம் கிராமத்தில் இயங்கும் நேரு யுவகேந்திரா இளைஞா் விளையாட்டுக் குழு மற்றும் ஊா் பொதுமக்கள் சாா்பில், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டி இரு தினங்கள் நடைபெற்றன.

இப்போட்டியில், தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சோ்ந்த 90 அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த சிங்கிபுரம் அணிக்கு குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவா் சுசீலா முருகேசன் ரூ. 15,000, இரண்டாமிடம் பிடித்த தம்மநாயக்கன்பட்டி அணிக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் வெண்ணிலா வெங்கடேசன் ரூ 12,000, மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவா் குழந்தைவேல் ரூ 8,000 பரிசு வழங்கினா்.

பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்த கோபிசெட்டிபாளையம் பி.கே.டி. கல்லூரி அணி, இரண்டாம் இடம் பிடித்த ஆத்தூா் பாரதியாா் மேல்நிலைப் பள்ளி அணிகளுக்கும், பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.