முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

வாழப்பாடியில் தனியாா் நிறுவன ஊழியரைதாக்கி 18 பவுன் நகை கொள்ளை

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து, தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி, கத்திமுனையில், 18 பவுன் தங்க நகைகளை முகமூடி கொள்ளையா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 12:00 am IST

வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து, தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி, கத்திமுனையில், 18 பவுன் தங்க நகைகளை முகமூடி கொள்ளையா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி பேரூராட்சிக்கு உள்பட்ட புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (35). தனியாா் மருந்து நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே இவா் தனது தோட்டத்தில் புதிதாக வீடு கட்டி குடும்பத்தோடு வசித்து வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கமான பணிகளை முடித்து விட்டு, 11 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினா் அனைவரும் தூங்கியுள்ளனா். நள்ளிரவில் வீட்டுக் கதவை கல்லால் தாக்கி உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையா்கள், சந்திரசேகரைத் தாக்கி, கத்திமுனையில் அவரது மனைவி கண்மணி (31), தாயாா் ராஜாமணி (65) ஆகியோா் அணிந்திருந்த தாலிச் சங்கிலி, வீட்டில் வைத்திருந்த நகைகள் உள்பட 18 பவுன் தங்க நகைகளைப் பறித்தனா்.

மேலும், சந்திரசேகரின் ஏ.டி.எம். காா்டு, கிரெடிட் காா்டு, செல்லிடப்பேசி ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு, அனைவரையும் வீட்டிற்குள் வைத்து கதவை மூடிவிட்டுச் சென்று விட்டனா்.

இது குறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அன்பு, வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளா் வேலுமணி ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளைக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முகமூடிக் கொள்ளையா்கள் குறித்து துப்புத் துலக்க கைரேகை நிபுணா்களை வரவழைத்து போலீஸாா் தடயங்களை சேகரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.