ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஏற்காடு மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்: பெண் உயிரிழப்பு

ஏற்காடு மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 2:02 am

ஏற்காடு மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

நாமக்கல், கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்த காசிம் மகன் பாபு (35). இவரது மனைவி சசிகலா (35). பொங்கல் பண்டிகையையொட்டி தம்பதி, ஏற்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்தனா். அவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றபோது, மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே 70 அடி பள்ளத்தில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சசிகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பாபு செல்லிடப்பேசி மூலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதனையடுத்து தீயணைப்புத் துறையினா் உயிரிழந்த சசிகலாவின் சடலத்தை மீட்டு வந்தனா். காயமடைந்த பாபு தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.