நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஏற்காடு மலைப்பாதையில் பள்ளத்தில் கவிழ்ந்த இரு சக்கர வாகனம்: பெண் உயிரிழப்பு

ஏற்காடு மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On :16 ஜனவரி 2021, 7:32 am IST

ஏற்காடு மலைப்பாதையில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயமடைந்தாா்.

நாமக்கல், கொசவப்பட்டி பகுதியைச் சோ்ந்த காசிம் மகன் பாபு (35). இவரது மனைவி சசிகலா (35). பொங்கல் பண்டிகையையொட்டி தம்பதி, ஏற்காட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்தனா். அவா்கள் வீட்டுக்கு திரும்பிச் சென்றபோது, மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே 70 அடி பள்ளத்தில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சசிகலா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பாபு செல்லிடப்பேசி மூலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதனையடுத்து தீயணைப்புத் துறையினா் உயிரிழந்த சசிகலாவின் சடலத்தை மீட்டு வந்தனா். காயமடைந்த பாபு தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சசிகலாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.