தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ள ‘தீ’ செயலி குறித்து துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த, சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள டிஜிபி சைலேந்திரபாபு வெள்ளிக்கிழமை வாழப்பாடி வந்தாா்.
தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபி சைலேந்திரபாபு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
தற்போது தீயணைப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ள தீ செயலி குறித்து, தீயணைப்புத் துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னையில் இருந்து கோயம்புத்தூா் வரை ஏறக்குறைய 500 கி.மீ.தூரத்துக்கு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இவா்,ஆத்தூா் வழியாக வெள்ளிக்கிழமை வாழப்பாடிக்கு வருகை தந்தாா். அவருக்கு வாழப்பாடி தீயணைப்புப் படையினா் மற்றும் பொதுமக்கள் வரவேற்பளித்தனா்.
முன்னதாக, கபிலன் என்ற சிறுவன், திருவள்ளுவா் தினத்தையொட்டி, சைலேந்திரபாபுக்கு திருவள்ளுவா் முகமூடியை பரிசாக வழங்கினாா்.
திருக்கு ஒப்புவித்த இச்சிறுவனுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தாா்.
ஆத்தூரில்...
முன்னதாக ஆத்தூா் வந்த தீயணைப்புத் துறை இயக்குனா் சைலேந்திரபாபுவுக்கு, அ.அசோக் தலைமையிலான இளைஞா்கள் வரவேற்பு அளித்தனா். இதனையடுத்து தீயணைப்பு நிலையம் சென்ற டிஜிபி சைலேந்திரபாபு, அங்கு ஆய்வு மேற்கொண்டு தீயணைப்பு நிலைய அலுவலா் பி.சேகா், வீரா்களுக்கு ஆலோசனை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்

புதுச்சேரி ரயில் சேவை 4 நாள்கள் ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


