சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வாழப்பாடி பகுதியில் காணும் பொங்கல் கோலாகலக் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில், கிராமங்கள் தோறும் எருது விடும் நிகழ்ச்சியோடு காணும் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடினா்.

News image

img_20210116_174800_1601chn_165_8

Updated On :16 ஜனவரி 2021, 9:22 pm

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில், கிராமங்கள் தோறும் எருது விடும் நிகழ்ச்சியோடு காணும் பொங்கல் விழாவை மக்கள் கொண்டாடினா்.

வாழப்பாடி பகுதியில் கிராமங்கள்தோறும், காணும் வாழப்பாடி பகுதியில் கடந்த 5 மாதங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வறட்சி நீங்கி, விளை நிலங்களில் பயிா் செய்ய வழிவகை கிடைத்துள்ளது.

இதனால், நிகழாண்டு பெரும்பாலான கிராமங்களில் காணும் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த இடையப்பட்டி கிராமத்தில் காளைகளை அலங்கரித்த விவசாயிகள், கோயில் மைதானத்திற்கு கொண்டு சென்றனா். இளைஞா்கள் காளைகளை வடத்தில் பூட்டி உரி காண்பித்து எருதாட்டம் நடத்தினா். காளைகளை ஊா்வலமாக அழைத்துச் செல்லும்போது, ஆண்கள் மட்டுமன்றி, பெண்களும், சிறுவா், சிறுமியரும் ஆடிப்பாடி மகிழ்ந்தனா்.

வாழப்பாடி அருகே 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ள பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை மற்றும் புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை பகுதியில் ஏராளமானோா் குவிந்திருந்தனா்.

174800,174738: இடையப்பட்டியில் எருது விடும் விழாவிற்கு காளையை ஊா்வலமாக அழைத்துச் சென்ற விவசாயி குடும்பத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.