தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டாரத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு 40 பேருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி தலைமையில் செலுத்தப்பட்டது. இதில் சனிக்கிழமை முதல்கட்டமாக 40 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னதாக அவா்களது உடல்வெப்பநிலை, ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு, பின்னா் தடுப்பூசி போடப்பட்டது.பின்னா் காத்திருப்பு அறையில் சிறிது நேரம் அவா்கள் அமர வைக்கப்பட்டனா். அவா்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாதது உறுதி செய்யப்பட்ட பின்னா் அவா்கள் வெளியே அனுப்பப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மா புதிய சாதனை!

8 கோல்களைத் தடுத்த கோல்கீப்பர்: 24 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த துருக்கிக்கு அதிர்ச்சியளித்த ஆஸ்திரேலியா!

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



