மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

அங்கிள் ஆன்டெனா

கடல்  நீரை வாயில் வைக்க முடிவதில்லை. அப்படி ஒரு உப்புக் கரிப்பு. கடல் நீருக்கு எப்படி இந்த உப்புச் சுவை வந்தது?

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:00 am IST


கேள்வி: கடல்  நீரை வாயில் வைக்க முடிவதில்லை. அப்படி ஒரு உப்புக் கரிப்பு. கடல் நீருக்கு எப்படி இந்த உப்புச் சுவை வந்தது?

பதில்: நிலப்பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் கற்களினால் தான் கடல் நீருக்கு இந்த உப்புச் சுவை வந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். எல்லாம் ஒரு காரியமாகத்தான். இல்லையில்லை மூன்று காரியங்களாகத்தான்...   

கரியமில வாயுவுடன் (கார்பன்-டை-ஆக்ûஸட்)  நீர் சேரும்போது  அந்த நீருக்கு அமிலத் தன்மை வந்து விடு கிறது. 

மழை நீர் நிலத்தில் விழும்போது, சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் கலந்து இருக்கும் கார்பன்-டை-ஆக்ûஸட் உடன் சேர்ந்து சற்றே அமிலத்தன்மை கொண்ட நீராக மாறுகிறது.

இப்படி அமிலத்தன்மை கொண்ட நீர்தான் நிலப்பகுதியில் உள்ள பாறைகளை அரிக்க ஆரம்பிக்கிறது. கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பாறைகள் நீர் பட்டு பட்டு அரித்து இருப்பதைக் காண முடியும். 

இப்படி மழை நீர் பாறைகளை அரிக்கும்போது மின்  வயப்பட்ட அணுத்துகள்கள் உண்டாகின்றன. இந்த அணுத்துகள்கள் நீரில் கலந்து குட்டைகளிலும் சிறிய ஓடைகளிலும் சேர்ந்து கொண்டு கடைசியில் கடலில் சென்று கலக்கின்றன.

கடல் நீரில் இருக்கும் பலவித ஆர்கானிசம்களின் மூலம் இந்த மின்வயப்பட்ட அணுத்துகள்கள் காலம் காலமாகக் கடல் நீரில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த அணுத் துகள்களில் சோடியம் மற்றும் குளோரைட் அதிகமாக இருக்கும். இந்த சோடியமும் குளோரைடும் சேர்ந்துதான் கடல் நீருக்கு உப்புச் சுவையை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இந்த நிகழ்வு தொன்றுதொட்டு நடந்து வருவதால் கடல் நீர் உப்புச் சுவையுடன்தான் இருந்தாக வேண்டிய கட்டாயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.