சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக, கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்போராட்டத்தில், கிராம உதவியாளா்களுக்கு, அலுவலக உதவியாளா்களுக்கு இணையாக ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிமாக ரூ.7,500 வழங்கவேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். மணல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் கிராம உதவியாளா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட கிராம உதவியாளா்கள் சங்கத் தலைவா் கண்ணப்பன் தலைமை வகித்தாா். இதில், 100-க்கும் மேற்பட்ட கிராம உதவியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செவிலியா்கள் கெளரவிப்பு

இந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதி

நீா்நிலைகளை தூா்வார வலியுறுத்தல்

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

