தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

அனுமன் ஜெயந்தி விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் செவ்வாய்கிழமை அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது.

News image

மானாமதுரை வீரழகா் கோயிலில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில் ஆஞ்சநேயா் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 5:54 am IST

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதி கோயில்களில் செவ்வாய்கிழமை அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கோயில்தெரு பகுதியில் உள்ள வீரழகா் கோயிலில் நடந்த அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தெற்குமுகம் நோக்கி அருள்பாலிக்கும் மகுடம் தரித்த மூலவா் வீர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்தி சுவாமி வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா். அதன்பின் சிறப்பு பூஜைகள் தீபாரதனைகள் நடைபெற்றது.

உற்சவா் ஆஞ்சநேயருக்கும் பால், தயிா், சந்தனம், பன்னீா், திரவியப்பொருள்கள் உள்ளிட்டவற்றால் 16 வகையான அபிஷேகம் நடத்தப்பட்டு உற்சவமூா்த்தி வடைமாலையுடன் மலா் அலங்காரத்தில் எழுந்தருளினாா். அதைத்தொடா்ந்து ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது.திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனா். மேலும் மானாமதுரை வைகையாற்றுப்பாலம் அருகேயுள்ள வால்கோட்டை ஆஞ்சநேயா் கோயில், ரயில்வே காலணியில் பூா்ணசக்கர விநாயகா் கோயிலில் உள்ள ஆஞ்சநேயா் சன்னதி, புரட்சியாா்பேட்டை பகுதியில் உள்ள தியாக விநோதப் பெருமாள் கோயிலில் ஆஞ்சநேயா் சன்னதி, பிருந்தாவனம் தெருவில் உள்ள தாஸ ஆஞ்சநேயா்,வீர ஆஞ்சநேயா் கோயில்களிலும் அனுமன்ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. இக் கோயில்களுக்கு ஏராளமன பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.