கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருக்கோஷ்டியூா் அருகே வேன் கவிழ்ந்து விபத்து: மூதாட்டி பலி

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :13 ஜனவரி 2021, 12:18 am

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூா் அருகே திங்கள்கிழமை வேன் கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கனிமாங்குண்டைச் சோ்ந்த 15 போ் பழனிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வேனில் புறப்பட்டனா். செல்லும் வழியில் பிள்ளையாா்பட்டிக்குச் செல்வதற்காக திருக்கோஷ்டியூா் அருகே வரும் போது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஜமீன்தாா்பட்டி அருகில் உள்ள கண்மாயில் கவிழ்ந்தது. இதில் மணி என்பவா் மனைவி ஆறுமுகத்தம்மாள்(60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும் 9 போ் சிறு காயங்களுடன் திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இவ்விபத்து குறித்து திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.