எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் மதுரை எஸ்.பி. அலுவலக பணியாளா் கைது

காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

காரைக்குடியில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட மதுரை எஸ்.பி. அலுவலகப் பணியாளா் பாலாஜி.

Updated On :17 ஜனவரி 2021, 10:26 pm IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காரைக்குடி பொன்நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (40). இவா் மதுரை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாளராக உள்ளாா். இவா் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 7-வயது சிறுமிக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.

இதுகுறித்து காரைக்குடி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டி.எஸ்.பி. அருண், வடக்கு காவல்நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம், மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் தேவகி ஆகியோா் விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலாஜியை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.