பத்து மாதம் குழந்தையைச் சுமக்கிறாள் அன்னை
பத்தியமாக உணவருந்தி காக்கிறாள் சேயை !
சுமையை அவள் சுகமாகவே கருதுகின்றாள்
சுகப்பிரசவம் வேண்டுமென்று நாளும் நடக்கிறாள் !
தவவாழ்க்கை வாழ்கிறாள் என்றால் மிகையன்று
தவம் இருந்தே குழந்தையை ஈன்று எடுக்கிறாள் !
ஒவ்வொரு அடியையும் கவனமாக வைக்கின்றாள்
ஒவ்வொரு நொடியும் குழந்தையைக் காக்கின்றாள் !
கருவுற்ற தகவல் அறிந்ததும் மனம் மகிழ்கின்றாள்
கருவுற்ற நாள் முதலாய் கனவுகள் காண்கின்றாள் !
வயிற்றுக்குள் குழந்தை எட்டி உதைத்தபோதும்
வலியினைத் தாங்கி வாய் விட்டு சிரிக்கின்றாள் !
தாய்மொழியின் அருமை பெருமையை அவள்
தன்சேயுக்குக் கருவிலேயே கற்பித்து மகிழ்கின்றாள் !
தாயோடு சேர்ந்து சேயும் ரசிக்கும் இசை
தாயின் கருவிலிருந்தே கேட்கும் ஓசை !
பிரசவ வலி என்பது சொல்லில் அடங்காது
பிறப்பு மறுபிறப்பு எடுத்தே வருகின்றாள் !
தாய்மை அடைந்தமைக்காக மகிழ்ந்தபோதிலும்
தாயாகும் தருணம் உயிர் போய் உயிர் வரும் !
ஆண்கள் யாரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
அன்புத் தாய்மார்கள் மட்டுமே உணர்ந்த உயிர்வலி !
முந்நூறு நாட்கள் அன்னை அவள் படும் பாடு
மண்ணில் மறக்கமுடியாத துன்பம் பெரும் பாடு !
சுமையையும் சுகமாகக் கருதுபவள் அன்னை
சுகத்தையும் சுமையாகக் கருதுவது குழந்தை !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

பேய்குளத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

