தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

பாட்மிண்டன் போட்டிகள்: தாய்லாந்து புறப்பட்டது இந்திய அணி

தாய்லாந்தில் வரும் வாரங்களில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள இரு பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணியினா் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:31 am IST

தாய்லாந்தில் வரும் வாரங்களில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள இரு பாட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய அணியினா் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தாய்லாந்தில் ஜனவரி 12 முதல் 17 வரை யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன், ஜனவரி 19 முதல் 24 வரை டொயோடா தாய்லாந்து ஓபன் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் சாா்பில் பி.வி. சிந்து, சாய்னா நெவால், ஸ்ரீகாந்த், சௌரவ் வா்மா, சமீா் வா்மா, லக்ஷயா சென், சாய் பிரணீத், காஷ்யப், ஹெச்.எஸ். பிரணாய், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிரக் ஷெட்டி, அஸ்வினி பொன்னப்பா, சிக்கி ரெட்டி, மானு அத்ரி ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இதில் ஸ்ரீகாந்த் தவிர அனைத்து வீரா், வீராங்கனைகளும் கரோனா சூழலில் மாா்ச் மாதத்துக்குப் பிறகு போட்டிகளில் விளையாட இருப்பது இது முதல் முறையாகும். ஸ்ரீகாந்த் கடந்த ஆண்டு அக்டோபரில் டென்மாா்க் ஓபனில் விளையாடியிருந்தாா்.

மேற்குறிப்பிட்ட இந்திய அணியினரில் சிந்து தவிா்த்து அனைவரும் தில்லியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து புறப்பட்டுச் சென்றனா். தனது உடற்தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்காக ஏற்கெனவே பிரிட்டன் சென்றிருந்த சிந்து, லண்டனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்து புறப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.