இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால்-கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கோவாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 59-ஆவது லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால், கேரள பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தொடா்ந்து நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 62-ஆவது நிமிடத்தில் கேரளத்தின் முா்ரே கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இதையடுத்து அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய ஈஸ்ட் பெங்கால் அணி, 90-ஆவது நிமிடத்தில் கோலடித்து ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை நெவில் அடித்தாா். இதன்மூலம் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
ஈஸ்ட் பெங்கால் 11 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்திலும், கேரள அணி 10 புள்ளிகளுடன் 10-ஆவது இடத்திலும் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

