40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை: இங்கிலாந்துக்கு 74 ரன்கள் இலக்கு

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

சதமடித்த மகிழ்ச்சியில் திரிமான்னே

Updated On :17 ஜனவரி 2021, 5:22 pm IST


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 359 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் காலேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து, கேப்டன் ஜோ ரூட்டின் இரட்டைச் சதத்தால் 421 ரன்கள் குவித்து 286 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, இலங்கை அணி தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. 3-வது நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்திருந்தது. திரிமான்னே 76 ரன்களுடனும், எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

130 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது.

எம்புல்டேனியா ரன் ஏதும் எடுக்காத நிலையிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து, திரிமான்னேவுடன் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் இணைந்தார். 

திரிமான்னே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதமடித்தார். ஆனால், சதமடித்த சிறிது நேரத்திலேயே 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

எனினும், மேத்யூஸ் நிதானம் காட்டி விளையாடினார். மற்ற வீரர்கள் மேத்யூஸுக்கு ஒத்துழைப்பு தராமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 30 ரன்களைத் தாண்டவில்லை.

மேத்யூஸ் மட்டும் அரைசதம் அடித்து நம்பிக்கையளித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அந்த அணி 359 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் 71 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜேக் லீச் 5 விக்கெட்டுகளும், டோம் பெஸ் 3 விக்கெட்டுகளையும், சாம் கரண் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதன்மூலம், இங்கிலாந்து வெற்றிக்கு 74 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.