ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் 9ஆவது சுற்றில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 43 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் "பி' பிரிவில் 33 புள்ளிகள் பெற்று முதல் அணியாக காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் விளையாடிய உத்தரப் பிரதேசம் 160 ரன்களுக்கும், ஒடிசா 127 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.33 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய உத்தரப்பிரதேசம் 2ஆவது இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர், 145 ரன்களை இலக்காக நிர்ணயித்து களமிறங்கிய ஒடிசா 2ஆம் நாள் முடிவில் 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து ஆடிய அந்த அணி 3ஆம் நாளில் 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் உத்தரப் பிரதேச அணிக்கு 6 புள்ளிகள் கிடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் இமயம் பாரதிராஜா! வாழ்க்கைத் தடம் - புகைப்படங்களில்!

இயக்குநர்கள் உருவாக பாதை அமைத்து தந்த பிதாமகன் பாரதிராஜா: சேரன் இரங்கல்!

திரையுலகைப் புரட்டிப்போட்ட பாரதிராஜாவின் 16 வயதினிலே!

காலம் கடந்து நிற்கும் காதல் இலக்கணம்! பாரதிராஜாவின் முதல் மரியாதை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


