எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது டிரா

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில்

News image
Updated On :1 மார்ச் 2013, 9:20 pm

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில் கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது முறையாக டிரா செய்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 4-வது சுற்றில் இத்தாலியின் ஃபேபியானோ கருணாவிடம் தோல்வி கண்ட ஆனந்த், இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இத்தாலியின் ஃபேபியானோ கருணா 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போரிஸ் கெல்பான்ட், முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆனந்த் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.