ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஐடிஎஃப் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் ஜீவன்-விக்டர் மோதல்

எம்சிசி-சுப்பிரமணியம் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ருமேனியாவின்

Updated On :1 மார்ச் 2013, 9:11 pm

எம்சிசி-சுப்பிரமணியம் நினைவு ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்-ருமேனியாவின் விக்டர் கிரிவாய் ஆகியோர் மோதுகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் 7-6 (2), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் தக் குன் வாங்கையும், ருமேனியாவின் விக்டர் கிரிவாய் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரேசிலின் தலேஸ் துருனியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.

ஆரட்டா-அருண் ஜோடி சாம்பியன்: ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஜப்பானின் ஆரட்டா ஒனோஸாவா-இந்தியாவின் அருண் பிரகாஷ் ஜோடி 6-4, 0-6, 10-7 என்ற செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி-ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.