வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சர்வதேச செஸ்: கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது டிரா

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில்

News image
Updated On :2 மார்ச் 2013, 2:50 am IST

ஜூரிச் செஸ் சேலஞ்ச் போட்டியின் 5-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் கெல்பான்டுடன் டிரா செய்தார். இந்தப் போட்டியில் கெல்பான்டுடன் ஆனந்த் 2-வது முறையாக டிரா செய்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடைபெற்று வரும் இப் போட்டியின் 4-வது சுற்றில் இத்தாலியின் ஃபேபியானோ கருணாவிடம் தோல்வி கண்ட ஆனந்த், இதுவரை ஒரு வெற்றிகூட பெறவில்லை.

இன்னும் ஒரு சுற்று மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இத்தாலியின் ஃபேபியானோ கருணா 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போரிஸ் கெல்பான்ட், முன்னாள் உலக சாம்பியனான ரஷியாவின் விளாதிமிர் கிராம்னிக் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஆனந்த் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.