மாநில அளவிலான ஒருநாள் நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. செந்தமிழன் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஆடவர், மகளிர் என இரு பிரிவினருக்கும் மொத்தம் 8 பிரிவுகளில் இப் போட்டி நடத்தப்படுகிறது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 200 வீராங்கனைகள் உள்பட 550 பேர் பங்கேற்கின்றனர். போட்டி காலை 7.30 மணி முதல் மாலை வரை நடைபெறுகிறது.
இப் போட்டிக்கு எவ்வித அனுமதிக் கட்டணமும் கிடையாது. போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கப்படவுள்ளது.
மேற்கண்ட தகவல் வேளச்சேரி நீச்சல் குள மைதான அலுவலர் தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









