தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மல்யுத்தம் நீக்கப்பட்ட விவகாரம்: மக்களவையில் ஜிதேந்திர சிங் பதில்

மல்யுத்தத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய

News image
Updated On :11 மார்ச் 2013, 7:34 pm

மல்யுத்தத்தை ஒலிம்பிக் போட்டியில் சேர்க்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

"ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 70 நாடுகளும் மல்யுத்த விவகாரம் குறித்து பிரச்னையை கையிலெடுக்க வேண்டும். அதற்காக அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களை ஈடுபடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகம் உதவ வேண்டும், என்று ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

மக்களையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது பேசிய அவர் இதைத் தெரிவித்தார்.

"2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தத்தை மீண்டும் சேர்ப்பதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழமையான விளையாட்டான மல்யுத்தம் நீக்கப்பட்டது எந்த அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் என்று அரசு நன்கு உணர்ந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

2020-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலிருந்து மல்யுத்த விளையாட்டை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் சமீபத்தில் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.