கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

மலேசிய பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து

மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Updated On :2 மே 2013, 1:08 am IST

மலேசிய கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் பி.வி.சிந்து 21-13, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் செனா ஜியாவூனை தோற்கடித்தார். வியாழக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஹாங்காங்கின் சியூங் நகனை சந்திக்கிறார் சிந்து.

3-வது சுற்றில் குருசாய் தத்: ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் குருசாய் தத் 21-8, 21-9 என்ற நேர் செட்களில் மலேசியாவின் கியான் ஜின் கோவையும், சமீர் வர்மா 21-15, 16-21, 21-19 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வெய் ஃபெங் சாங்கையும் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.

இதேபோல் இந்தியாவின் ஸ்ரீகாந்தும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். அவர் 2-வது சுற்றில் 21-9, 21-19 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் சுப்பான்யூவை தோற்கடித்தார். அதேநேரத்தில் இந்தியாவின் எச்.எஸ்.பிரணாய் 21-15, 14-21, 15-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் ஜைனுதீனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.