கால்பந்துப் போட்டியில் ஸ்பாட் ஃபிக்ஸிங் முறைகேட்டில் ஈடுபட்ட லெபனான் நாட்டைச் சேர்ந்த நடுவர் அலி சபாக்குக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அலி சபாக் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற நடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏஎஃப்சி கோப்பை கால்பந்து போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால்-தம்பின் ரோவர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடுவர் அலி சபாக், லைன் மேன்கள் அலி ஈத், அப்துல்லா தலீப் ஆகியோர் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உடன்பட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போட்டிக்கு முன்பாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். வேறு நடுவர், லைன் மேனை வைத்து போட்டி நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த மூவரும், சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பு இருப்பதையும், மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய உடன்பட்டதையும் ஒப்புக் கொண்டனர். இந்த வழக்கில் நடுவர் அலி சபாக்குக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
லைன்மேன்கள் இருவருக்கும் ஏற்கெனவே 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு விட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? பிறந்தவுடன் குழந்தைகள் அழுவது ஏன்?
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!

தவெகவில் இணைந்தது ஏன்? சி. மகேந்திரன் விளக்கம்
இந்த வார ஓடிடி படங்கள்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



