மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இரண்டாவது ஐஎஸ்எல்: சென்னை சாம்பியன்

இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2015, 3:28 pm

பெர்லின்

இரண்டாவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் சென்னையின் எஃப்சி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோவா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கடந்த அக்.3 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது.

மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு எஃப்சி கோவா, சென்னையின் எஃப்சி அணிகள் தகுதி பெற்றுள்ளன. கோவாவின் ஃபடோர்டாவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இன்று மாலை நடைபெற்ற இப்போட்டியில் தொடக்கம் முதலே அனல் பறந்தது.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் ஹோலி கோவா அணிக்கும், பாலிவுட் ஜாம்பாவான் அபிஷேக் பச்சன் சென்னை அணிக்கும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் பந்து இரு கோல் கம்பங்களை சுற்றி வந்தாலும், யாரும் கோல் அடிக்கவில்லை.

இரண்டாவது பாதியில் மொத்தம் 5 கோல்கள் அடிக்கப்பட்டன. இறுதியில் சென்னை அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.