சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மோசமான வரலாறு படைத்த பஞ்சாப் அணி; டெல்லியின் சாதனை முறியடிப்பு

இந்த முறையும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாத பஞ்சாப், மோசமான வரலாறை படைத்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 அக்டோபர் 2021, 10:39 am

DIN

கே. எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, 2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்து இம்முறையும் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக மோசமான சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது.

தொடர்ந்து ஏழாவது முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் மோசமான சாதனையை படைத்துள்ளது. முன்னதாக, தில்லி அணி, தொடர்ந்து ஆறு தொடர்களில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்தது மோசமான சாதனையாக இருந்தது.

இந்த தொடரில், 14 போட்டிகள் விளையாடி அதில் ஆறில் மட்டுமே பஞ்சாப் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக, 2014 தொடரில் இரண்டாவது இடம் பிடித்த பஞ்சாப், அதற்கு பிறகு ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவே இல்லை. அதற்கு முன்பு, 2008 தொடரில், அரை இறுதி வரை அந்த சென்றிருந்தது.

2008ஆம் ஆண்டுக்கு பிறகு, ஐந்து தொடர்களில் தொடர் தோல்விகளை மட்டுமே பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு பரிசளித்திருந்தது. 2014ஆம் ஆண்டு, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தாலும், அதன் பிறகு மோசமான ஆட்டத்தையே அந்த அணி வெளிப்படுத்தி வந்துள்ளது.

அதேபோல், 2013 முதல் 2018 வரை, ப்ளே ஆப் சுற்றுக்கோ அரை இறுதிக்கோ தில்லி அணி சென்றதே இல்லை. இருப்பினும், 2019, 2020 ஆகிய தொடர்களில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று, இரண்டு ஆகிய இடங்களை பிடித்தது. இதுவரை, தில்லி, பஞ்சாப், பெங்களூரு ஆகிய அணிகள் ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை.

ஆனால், தில்லி, பெங்களூரு ஆகிய அணிகள் இந்த தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றிருப்பது அதன் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. புள்ளி பட்டியலில் 10 போட்டிகளில் வெற்றிபெற்ற தில்லி முதல் இடத்தையும் ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள பெங்களூரு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.