எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தினேஷ் கார்த்திக்கின் சரவெடி, நிலைத்து நின்று ஆடிய டூ பிளெஸ்ஸி...பெங்களூரு அணி 192 ரன்கள் குவிப்பு

நான்கு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்களை எடுத்தது. 

News image
தினேஷ் கார்த்திக்
Updated On :8 மே 2022, 12:03 pm

DIN

நடப்பு ஐபிஎல் தொடரின் 54ஆவது ஆட்டம் மும்பை வாங்கடே மைதானத்தில் ஹைதராபாத், பெங்களூரு அணிக்கிடையே இன்று நடைபெற்றுவருகிறது. அதில், டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் கோலி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர், களமிறங்கிய ராஜத் பட்டிடார், டூ பிளெஸ்ஸி உடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்துபோது பட்டிடார் சுச்சித் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 

இருப்பினும், நான்காவது ஆட்டக்காரராக களமிறங்கிய மாக்ஸ்வெல்லும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 24 பந்துகளி்ல் 33 ரன்கள் எடுத்திருந்தபோது அவரும் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். முதல் இன்னிங்ஸ் பரபரப்பான கட்டத்தை நோக்கி சென்றபோது, தினேஷ் கார்த்திக் களமிறங்கி சரவெடி நிகழ்த்தினார். 

நான்கு சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு பெங்களூரு அணி 192 ரன்களை எடுத்தது. 

நிலைத்து நின்று ஆடிய டூபிளெஸ்ஸிஸ் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணி சார்பாக சுச்சித் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.