தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இன்றுமுதல் புதிய ஃபார்மட்டில் சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி போட்டி

15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.

News image
Updated On :3 ஏப்ரல் 2025, 11:18 pm

DIN

ஜான்சி: உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் 15-ஆவது சீனியர் ஆடவர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் வெள்ளிக்கிழமை (ஏப். 4) தொடங்குகிறது.

வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மொத்தம் 30 அணிகள் பங்கேற்கின்றன. "பி' மற்றும் "சி' டிவிஷன் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமையும் (ஏப். 4), "ஏ' டிவிஷன் ஆட்டங்கள் செவ்வாய்க்கிழமையும் (ஏப். 8) தொடங்குகின்றன.

முதல் முறையாக இந்தப் போட்டி டிவிஷன் ஃபார்மட்டில் நடத்தப்படுகிறது. அதாவது, போட்டியில் பங்கேற்கும் அணிகள் "ஏ', "பி', "சி' என 3 டிவிஷன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் "ஏ' டிவிஷன் அணிகளே சாம்பியன் பட்டத்துக்காக மோதும். "பி' டிவிஷன் அணிகள் அடுத்த சீசனில் "ஏ' டிவிஷனுக்கு முன்னேறுவதற்காகவும், "சி' டிவிஷன் அணிகள் அடுத்த சீசனில் "பி' டிவிஷனில் இடம் பிடிப்பதற்காகவும் விளையாடவுள்ளன.

"ஏ' டிவிஷன்: இந்த சீசனில் "ஏ' டிவிஷனில் நடப்பு சாம்பியன் ஒடிஸô, ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, பெங்கால், கர்நாடகம், புதுச்சேரி உள்பட 12 அணிகள் இடம் பிடித்துள்ளன. இவை தலா 3 அணிகள் வீதம் 4 குரூப்களாக பிரிக்கப்படும்.

ஒவ்வொரு குரூப்பிலுள்ள அணிகளும், இதர அணிகளுடன் தலா ஒரு ஆட்டத்தில் மோதும். குருப் சுற்று முடிவில் ஒவ்வொரு குரூப்பிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதிபெறும்.

"பி' டிவிஷன்: "பி' டிவிஷனில் இருக்கும் சண்டீகர், கோவா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, மிúஸôரம், தாத்ரா நகர் ஹவேலி, கேரளம், அஸ்ஸôம் ஆகிய 10 அணிகளும் தலா 5 அணிகள் வீதம் இரு குரூப்களாக பிரிக்கப்படும்.

குரூப் சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் "ஏ' டிவிஷனுக்கு முன்னேறும். கடைசி இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் "சி' டிவிஷனுக்குதள்ளப்படும்.

"சி' டிவிஷன்: "சி' டிவிஷனில் உள்ள ராஜஸ்தான், அருணாசல பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், திரிபுரா, சத்தீஸ்கர், ஹிமாசல பிரதேசம், பிகார், குஜராத் ஆகிய 8 அணிகளும் தலா 4 அணிகள் வீதம் 2 குரூப்களாக பிரிக்கப்படும். குரூப் சுற்று முடிவில் இரு குரூப்களிலும் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சீசனில் "பி' டிவிஷனுக்கு முன்னேறும்.

ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் இந்த புதிய டிவிஷன் முறையில் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.