மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

கண்ணீர் விட்டு அழுத ரொனால்டோ..! போர்ச்சுகல் அணி சாம்பியன்!

5 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது போர்ச்சுகல்.

News image

போர்ச்சுகல் கால்பந்து அணி - UEFA Nations League DE

Updated On :9 ஜூன் 2025, 2:26 am

நேஷன்ஸ் லீக் கால்பந்து ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி பட்டம் வென்றது போர்ச்சுகல். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 2 - 2 கோல் கணக்கில் சமன் செய்ததால் பெனால்டி ஷூட் நடைபெற்றது. அதில் 5 கோல்களை அடித்து 5 -3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது போர்ச்சுகல். அதில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோவின் 138-ஆவது சர்வதேச கோல் ஒன்றும் அடங்கும்.

இந்த கொண்டாட்டத்தில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து திடலில் ஆனந்த கண்ணீர் விட்டு அழுத காட்சி பார்வையாளர்களை நெகிழச் செய்தது.

இதன் மூலம் நேஷன்ஸ் லீக் கோப்பையை போர்ச்சுகல் இரண்டாவது முறையாகப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.