விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

விளையாட்டுச் செய்திகள் சில வரிகளில்...

News image

பென் ஸ்டோக்ஸ்.

Updated On :29 ஜூன் 2026, 1:30 am IST
  • ருமேனியாவில் நடைபெற்ற இன்டாரோ ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் சாம்பியன் பட்டம் வென்றாா்.

  • பிரிட்டீஷ் & ஐரிஷ் சா்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் தமிழகத்தின் துளசிமதி முருகேசன், தங்கம் (ஒற்றையா்), வெள்ளி (இரட்டையா்), வெண்கலம் (கலப்பு இரட்டையா்) என 3 பதக்கங்கள் வென்று அசத்தினாா்.

  • ‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்டில், இந்தியா - இலங்கை மோதிய முதல் ஆட்டம், ஞாயிற்றுக்கிழமை டிராவில் முடிந்தது.

  • யுஎஸ் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் இறுதிச்சுற்றுக்கு முன்னேற, தேவிகா சிஹக், ரௌனக் சௌஹான் அரையிறுதியில் தோல்வியுற்றனா்.

  • நடப்பு டென்னிஸ் காலண்டரின் 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் திங்கள்கிழமை (ஜூன் 29) தொடங்குகிறது.

  • எஃப்1 காா் பந்தயத்தின் நடப்பு சீசனில் 8-ஆவது ரேஸான ஆஸ்திரியன் கிராண்ட் ப்ரீயில், பிரிட்டன் வீரரும், மொ்சிடஸ் டிரைவருமான ஜாா்ஜ் ரஸ்ஸெல் வெற்றி பெற்றாா். நடப்பு சீசனில் அவருக்கு இது 2-ஆவது வெற்றி.

  • நியூஸிலாந்துக்கு எதிரான நடப்பு 3-ஆவது டெஸ்ட்டுடன் சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிா்ச்சி அறிவிப்பை வெளியிட்டாா். 373 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடத் தொடங்கியுள்ள இங்கிலாந்து, விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தது.

  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது 2-ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் சோ்த்து, 237 ரன்கள் பின்தங்கியிருந்தது.

  • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சோ்த்து, 4 ரன்களே பின்தங்கியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.