விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதைப் பற்றி...

News image

பென் ஸ்டோக்ஸ்.

Updated On :29 ஜூன் 2026, 12:00 am IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டனும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் இந்தத் தொடரில் சமனில் உள்ளது.

இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டி 4 நாள்கள் முடிந்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்காக அறிமுகமான பென் ஸ்டோக்ஸ், 2013-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக தனது ஓய்வு முடிவை சக வீரர்களிடம் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்தார். பின்னர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.