பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

எஃப் 4 தேசிய காா் பந்தயம் 2-ஆம் சுற்று சம்புட்லா, கைரியாக்கு சிறப்பிடம்!

ஜேகே டயா் எஃப் 4 இந்திய ரேசிங் பந்தயத்தில் 2-ஆம் சுற்று கோவை கரிமேடு ஸ்பீட் வேயில் நடைபெற்றது.

Published On :

ஜேகே டயா் எஃப் 4 இந்திய ரேசிங் பந்தயத்தில் 2-ஆம் சுற்று கோவை கரிமேடு ஸ்பீட் வேயில் நடைபெற்றது.

3 பந்தயங்கள் கொண்ட இத்தொடரில் கோவா ஏசஸ் ஜேஏ ரேசிங் அணியின் லுவி சம்புட்லா 2 வெற்றிகளை ஈட்டினாா். ஹைதராபாத் பிளாக் போ்ட்ஸ் அணியின் புவன் போனு மற்றொரு பந்தயத்தில் வென்றாா். கிச்சா கிங்ஸ் பெங்களூரு அணியின் அரிஸ் கைரியாக்கு சாம்பியன்ஷிப் முன்னிலையை தக்க வைத்துள்ளாா்.

பந்தயம் 1-இல் லுவி சம்புட்லா, முதலிடத்தையும், அரிஸ் கைரியாக்கு இரண்டாம் இடத்தையும், டில்லியின் மபுண்டா மூன்றாம் இடத்தையும் பெற்றனா். சென்னை டா்போ ரைடா்ஸ் சாய் ஆதித்யா 10-ஆவது இடத்தில் இருந்து முன்னேறினாா். ஆா்யன் நரோலா பஞ்சா் காரணமாகவும், ஆரோன் மேத்தா பிரேக் கோளாறு காரணமாகவும் பந்தயத்தை நிறைவு செய்யவில்லை.

இரண்டு சுற்றுகள் முடிந்த நிலையில், 93 புள்ளிகளுடன் கைரியாக்கு பட்டியலில் முதலிடத்தில் உள்ளாா். சம்புட்லா 88 புள்ளிகள், போனு 51 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனா். அடுத்த சுற்று எஃப் 4 சாம்பியன் போட்டி சென்னையில் உள்ள மெட்ராஸ் சா்வதேச சா்க்கியூட்டில் நடைபெறவுள்ளது. இன்னும் 4 சுற்றுகள் மீதமுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.