வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

அரையிறுதி: முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்த இந்திய அணி!

இதனால் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்தது... 

News image
Updated On :9 ஜூலை 2019, 9:57 am

எழில்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் 12-ஆவது ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.

புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன், நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்து மோதுகிறது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஆட்டம் நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் மயங்க் அகர்வால், கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், ஷமி ஆகியோர் இடம்பெறவில்லை. கடந்த ஆட்டத்தில் விளையாடிய குல்தீப் யாதவுக்குப் பதிலாக சஹால் இடம்பெற்றுள்ளார். நியூஸிலாந்து அணியில் செளதிக்குப் பதிலாக ஃபெர்குசன் இடம்பெற்றுள்ளார். 

இந்நிலையில் ஆட்டத்தின் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். கப்தில் முதல் பந்தை எதிர்கொண்டபோது அது அவர் காலில் பட்டது. இதனால் புவனேஸ்வர் உள்பட இந்திய வீரர்கள் எல்பிடபிள்யூ அவுட் கேட்டார்கள். ஆனால் நடுவர் மறுத்துவிட்டார். இதனால் டிஆர்எஸ் முறையீடு குறித்து கோலி, தோனி உள்ளிட்ட அணி வீரர்கள் விவாதித்தார்கள். சரியாக கால அளவு முடிவும் தருணத்தில் டிஆர்எஸ் கோரினார் கோலி.

பந்து பேட்டில் படவில்லையென்றாலும் லெக் ஸ்டம்பைத் தவறவிட்டது. இதனால் இந்திய அணி ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரெவ்யூவை இழந்தது. 

இதற்குப் பிறகு மிகவும் பாதுகாப்பு உணர்வுடன் ஆடினார்கள் நியூஸிலாந்து வீரர்கள். முதல் ரன்னை எடுக்கவே அவர்களுக்கு 17 பந்துகள் வரை தேவைப்பட்டன. 14 பந்துகளில் ஒரு ரன் மட்டும் எடுத்த கப்தில், பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப் பகுதியில் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நியூஸிலாந்து அணி 5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.