2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின.
இதில் இந்திய அணி 36 ரன்கள் வித்திாயசத்தில் வெற்றிபெற்றது. ஷிகர் தவன் 117 ரன்கள் குவித்தார். புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், போட்டி நடைபெற்ற லண்டன் ஓவல் மைதானத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பிரபல தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு பகிர்ந்துள்ளார்.
அதில், ஓவர் மைதானத்தின் உணர்வு பிரமிக்கத்தக்க வகையில் உள்ளது. எல்லாம் எனது மகனுக்காக தான் என்று பதிவிட்டுள்ளார்.