ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ரோஹித் சர்மா அவுட்டா?: நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ள ரசிகர்கள்!

பேட்டில் பட்டுத்தான் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது என்பது தெளிவாக இல்லை...

News image
Updated On :27 ஜூன் 2019, 5:35 pm IST

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இதனால் இன்றைக்கும் விஜய் சங்கர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்கவுள்ளார். மே.இ. அணியில் ஆஷ்லி நர்ஸ், எவின் லூயிஸுக்குப் பதிலாக சுனில் அம்ப்ரிஸ், ஃபெபியன் ஆலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

5 ஓவர்கள் வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரோச் வீசிய அடுத்த ஓவரில், ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார் ரோஹித் சர்மா. ஆனால் கடைசிப் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

முதலில் நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் முறையீடு செய்தார் மே.இ. அணி கேப்டன். அதில் அவுட் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முடிவு கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் என பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியது. 

பந்து பேட்டுக்கும் பேடுக்கும் இடையில் சென்றது. விடியோவில் பார்க்கும்போது பந்து எதில் முதலில் பட்டது என்பது குழப்பமாக இருந்தது. ஆனால் பேட்டில் பட்டுத்தான் பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது என்பது தெளிவாக இல்லை. இதனால் மூன்றாவது நடுவர், சந்தேகத்தின் அடிப்படையில் நாட் அவுட் என்றே அறிவித்திருக்க வேண்டும் என்று பலரும் சமூகவலைத்தளங்களில் கருத்துகளைக் கூறியுள்ளார்கள். நடுவரின் முடிவைக் கண்டு ரோஹித் சர்மா மட்டுமல்லாமல் அவருடைய மனைவி ரித்திகாவும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.