இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

இத்தாலி அணி கேப்டனாகும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

ஜோ பர்ன்ஸ்

படம் | ஐசிசி

Updated On :6 டிசம்பர் 2024, 10:43 am

DIN

இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் டி20 ஐரோப்பிய இறுதிச்சுற்றுக்கான போட்டிக்கு முன்னதாக, தற்போதைய இத்தாலி கேப்டன் கரேத் பெர்க்கிடம் இருந்து ஜோ பர்ன்ஸ் கேப்டன் பொறுப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்தாலி அணி தகுதிபெற்றால் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டி விளையாடும் வாய்ப்பை பெறும்.

ஜோ பர்ன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் தனது தாய் நாடான இத்தாலிக்காக அறிமுகமானார். அப்போது தகுதிச்சுற்று ஏ போட்டியில் விளையாடினார்.

ஜோ பர்ன்ஸ் 5 போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இத்தாலி அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல வழிவகுத்தது. அதன்படி, டி20 உலகக் கோப்பையில் பங்குபெறும் பெருமையை இத்தாலி அணி பெறும்.

2025 ஆம் ஆண்டுக்கான பிரந்திய போட்டிகளில் குர்னெஸி, ஜெர்ஸி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை இத்தாலி எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம்பிடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.