ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

இத்தாலி அணி கேப்டனாகும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News image

ஜோ பர்ன்ஸ் - படம் | ஐசிசி

Updated On :6 டிசம்பர் 2024, 4:13 pm IST

இத்தாலி கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் ஜோ பர்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்தாண்டு நடைபெறும் டி20 ஐரோப்பிய இறுதிச்சுற்றுக்கான போட்டிக்கு முன்னதாக, தற்போதைய இத்தாலி கேப்டன் கரேத் பெர்க்கிடம் இருந்து ஜோ பர்ன்ஸ் கேப்டன் பொறுப்பைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இத்தாலி அணி தகுதிபெற்றால் 2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான போட்டி விளையாடும் வாய்ப்பை பெறும்.

ஜோ பர்ன்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 23 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், கடந்த ஜூன் மாதம் தனது தாய் நாடான இத்தாலிக்காக அறிமுகமானார். அப்போது தகுதிச்சுற்று ஏ போட்டியில் விளையாடினார்.

ஜோ பர்ன்ஸ் 5 போட்டிகளில் விளையாடி 211 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இத்தாலி அணி இறுதிப்போட்டிக்குச் செல்ல வழிவகுத்தது. அதன்படி, டி20 உலகக் கோப்பையில் பங்குபெறும் பெருமையை இத்தாலி அணி பெறும்.

2025 ஆம் ஆண்டுக்கான பிரந்திய போட்டிகளில் குர்னெஸி, ஜெர்ஸி, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளை இத்தாலி எதிர்கொள்கிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இடம்பிடிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.