மேட்டூர் அணை வரலாற்றில் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படுவது இதுவே 4வது முறை!இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!ரஷியா, சீன அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்புபுகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத கைப்பேசிக்கு தடையில்லை: அமைச்சர்சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வுதமிழ்நாட்டில் சுங்கச் சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்வு!

பிங்க் பந்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்..!

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

மிட்செல் ஸ்டார்க் - படங்கள்: ஏபி

Published On :6 டிசம்பர் 2024, 2:50 pm IST

பார்டர் கவாஸ்கர் தொடரின் 2ஆவது டெஸ்ட்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தெர்வு செய்தது.

இதில் 44.1 ஓவரில் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில் ஆஸி. சார்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். 535 நாள்களுக்குப் பிறகு மீண்டும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக முதல்முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பிங்க் பந்தில் மிட்செல் ஸ்டார்க் அதிகமான முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

பிங்க் பந்தில் அதிகமுறை 5 விக்கெடுகள் வீழ்த்தியவர்கள்

1. மிட்செல் ஸ்டார்க் - 4

2. டிரெண்ட் போல்ட் - 2

3. ஜோஷ் ஹேசில்வுட் - 2

4. அக்‌ஷர் படேல் - 2

முதல் டெஸ்ட்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் ஸ்டார்க்கிடம் கிண்டல் செய்ததுக்கு இந்தமுறை சிறப்பாக பதில் கூறியுள்ளதாக சமூக ஊடகங்களில் பாராட்டு கிடைத்து வருகிறது.

முதல் பந்தில் விக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்பந்திலேயே விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் நியூசி. பந்துவீச்சாளர் ஹாட்லீயை சமன்செய்துள்ளார்.

பெட்ரோ கோலின்ஸ் - 3

மிட்செல் ஸ்டார்க் - 3*

ரிச்சர்ட் ஹாட்லீ - 3

கோயிஃப் அர்னால்டு - 2

கபில் தேவ் - 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.