அடிலெய்டு டெஸ்ட்டின் முதல் நாளில் புதிய சாதனை!

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடிலெய்டு் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியைக் காண வந்த ரசிகர்கள்
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான போட்டியைக் காண வந்த ரசிகர்கள்படம் | AP
Published on
Updated on
1 min read

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அடிலெய்டு் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் புதிய சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் விளையாடி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

புதிய சாதனை

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அடிலெய்டு டெஸ்ட் போட்டியைக் காண மைதானத்துக்கு முதல் நாளில் 36,225 பேர் வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம், அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் அதிக ரசிகர்கள் வருகை புரிந்துள்ளனர் என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2011-2012 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, அடிலெய்டில் நடைபெற்ற போட்டியின் முதல் நாளில் 35,081 பேர் மைதானத்துக்கு வந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்தது. தற்போது, அந்த சாதனை உடைக்கப்பட்டுள்ளது.

பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை நேரில் காண 96,463 பேர் வருகை புரிந்தனர். பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியைக் காண வந்த இரண்டாவது அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கை இதுவாகும்.

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறவுள்ள பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னி மைதானங்களுக்கும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com