பிங்க் பந்தினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது ஏமாற்றமளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது.
ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கே.எல்.ராகுல் 37 ரன்களும், ஷுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் விலகல்; காரணம் என்ன?
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸ்காட் போலாண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் எடுத்து அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முன்னாள் கேப்டன் அதிருப்தி
இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பிங்க் பந்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது அதிருப்தியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சுனில் கவாஸ்கர்
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி அதனால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். முதல் டெஸ்ட்டில் நாதன் மெக்ஸ்வீனி மற்றும் லபுஷேனின் விக்கெட்டினை பும்ரா சிறப்பாக பந்துவீசி வீழ்த்தினார். இந்திய பந்துவீச்சாளர்கள் அவ்வாறு இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். உண்மையில், பிங்க் பந்தினை இந்திய பந்துவீச்சாளர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசரஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!

சிஎஸ்கேவுக்கு கவலையளிக்கும் விஷயம் இது மட்டும்தான்; முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

