வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

பாகிஸ்தானில் ஒரே ஆண்டில் 7 பயிற்சியாளர்கள் மாற்றம்..! என்ன நடக்கிறது?

பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பி ராஜிநாமா செய்துள்ளார்.

News image

ஜேசன் கில்லெஸ்பி - படம்: யூடியூப் / பாகிஸ்தான் கிரிக்கெட்

Updated On :13 டிசம்பர் 2024, 12:42 pm IST

கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் டி20, ஒருநாள் அணிகளுக்கு தலைமைப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டனும் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டார்கள்.

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அஸார் மஹ்மூத் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

2 மாதங்களுக்கு முன்பு கேரி கிறிஸ்டன் தனது ராஜிநாமாவை அறிவித்தார். இந்த நிலையில், டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேசன் கில்லெஸ்பியும் தனவு ராஜிநாமாவை அறிவித்துள்ளார்.

இதனால், பாகிஸ்தான் அணியின் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஆகிப் ஜாவேத் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அற்புதமான பல வீரர்களை உருவாக்கியுள்ளார்கள். 2025இல் சாம்பியன்ஸ் டிராபியையும் நடத்தவிருக்கிறார்கள்.

சமீபகாலமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன்கள் மாற்றம், பயிற்சியாளர்கள் திடீரென ராஜிநாமா செய்வது அதிகரித்துள்ளது.

ஒரு வருடத்தில் 8ஆவது தலைமைப் பயிற்சியாளராக ஆகிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். சிலர் மோசமான தோல்விகளால் விலகினர். சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான பிரச்னைகளால் விலகியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.