மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எனக்கு பயமில்லை... அஸ்வின் தலைசிறந்தவர்: ஆஸி. கேப்டன் அதிரடி!

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்தது இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என ஆஸி. கேப்டன் கூறியுள்ளார்.

News image
ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் - படம்: ஏபி
Updated On :18 டிசம்பர் 2024, 12:27 pm

DIN

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்தது இந்தியாவுக்கு சாதகமாக அமையவில்லை என ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

ஆஸி அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுத்தது.

ஆஸி. அணி 2-வது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2.1 ஓவர்கள் விளையாடியபோது மோசமான வானிலையைத் தொடர்ந்து மழையினால் போட்டி சமனில் முடிந்தது.

இந்த நிலையில் பாட் கம்மின்ஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:

எனக்கு பயமில்லை

போட்டியின் போக்கு இந்தியாவின் பக்கம் சென்றதாக நான் நினைக்கவில்லை. உத்வேகம் குறித்த எந்த பயமும் எனக்கு இல்லை. இந்த வாரத்தில் நாங்கள் நிறையவே எடுத்துக்கொள்வோம்.

சில சிறந்த பார்ட்னர்ஷிப்கள் அமைந்தது 450 (445) ரன்களை குவித்துள்ளோம். 250இல் (260) இந்தியாவை ஆட்டமிழக்க வைத்துள்ளோம். அதனால் இந்த வாரத்தில் பல நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்வோம்.

5 நாளில் காற்று, மழையில் அதிகமாக பாதிக்கப்பட்டோம். அது வெறுப்பாக இருந்தது.

அஸ்வின் தலைசிறந்தவர்

அஸ்வின் ஓய்வு ஆச்சரியமாக இருந்தது. உலகம் முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளார். சுழல்பந்து வீச்சாளர்கள் அவர்மாதிரி நீண்டநாள் விளையாடுவதில்லை. தலைசிறந்த வீரர் அவர். இந்தியா, ஆஸி.யில் அவர் எங்களுக்கு மிகச் சவலான பந்துவீச்சாளராக இருந்துள்ளார். எங்களது அணியில் அவர்மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.

ஹேசில்வுட் விலகல், ஹெட் விளையாடுவார்

ஹேசில்வுட் தொடரிலிருந்து விலகுகிறார். நாங்கள் அவரை மதிக்கிறோம். அவரது பங்கு எங்களது அணிக்கு முக்கியம்.

ஹெட் விளையாடுவார். ஆஸி.யில் டாப் 3 இல் விளையாடுவது கடினம். ஆடுகளம் கடினமானதாக இருக்கும். மெக்ஸ்வீனி நன்றாக விளையாடினார். இன்றும் நன்றாகவே விளையாடினார்.

அவர் விரும்பிய ரன்களை குவிக்காமல் இருந்தாலும் சில முக்கியமான நேரங்களில் நன்றாக விளையாடியுள்ளார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.