உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கவில்லை: அஸ்வின் தந்தை குற்றச்சாட்டு!

தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அஸ்வினின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

News image

அஸ்வின் மற்றும் அவரது தந்தை ரவிச்சந்திரன்

Updated On :19 டிசம்பர் 2024, 5:52 pm IST

இந்திய அணியில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக நேற்று(டிச.18) அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று சென்னை வந்த அஸ்வினுக்கு சென்னை விமான நிலையம் மற்றும் அவரது இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அஸ்வின், தனது ஓய்வு முடிவும் குறித்தும், இனி வருங்காலங்களில் கிளப் அணிகளில் விளையாடுவது குறித்தும் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

அஸ்வின் திடீரென ஓய்வு அறிவித்த நிலையில், அவரது பெற்றோர் அவரை கண்ணீருடன் வரவேற்றனர்.

இதுகுறித்து அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரன் கூறுகையில், “இந்திய அணியில் அஸ்வினுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார்.

அஸ்வின் ஓய்வு அறிவிக்கப்போவது எனக்கும் கடைசி நிமிடத்தில் தான் தெரியவந்தது. அவர் மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நான் அதை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

14-15 ஆண்டுகளாக விளையாடிவரும் நிலையில் திடீரென ஓய்வு அறிவிக்கப்பட்டது இன்னும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவருக்கான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதையும் அவர் எவ்வளவு காலம்தான் பொறுத்துக்கொண்டு இருப்பார்” என்றார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற பிங்க் பந்து டெஸ்ட்டில் மட்டும் முதல் டெஸ்ட்டில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக விளையாடினார். இருப்பினும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்குப் பதிலாக ஜடேஜா களமிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.