விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

கிண்டலடித்த ஆஸி. ரசிகர்களை முறைத்த விராட் கோலி..! (விடியோ)

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் ஆட்டமிழந்து வெளியேறிய விராட் கோலியை கிண்டலடித்த ஆஸி. ரசிகர்கள்.

News image

கிண்டலடித்த ஆஸி. ரசிகர்களை முறைத்த விராட் கோலி - படங்கள்: எக்ஸ் / பரி

Updated On :27 டிசம்பர் 2024, 2:51 pm IST

ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்டில் ஆட்டமிழந்து வெளியேறிய கோலியை கிண்டலடித்த ஆஸி. ரசிகர்கள் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கோலியை ஃபீல்டிங்கின்போதே கத்தினார்கள்.

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோலி ஆட்டமிழந்து ஆடுகளத்தினைவிட்டு வெளியேறியபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

சிறிதுதூரம் உள்ளே சென்ற விராட் கோலி ஆஸி. ரசிகர்கள் கூச்சலிட்டதும் வெளியே வந்து ரசிகர்களை முறைத்து பார்ப்பார். பின்னர் ஆடுகள பாதுகாவலர் கோலியை அழைத்து சென்றுவிடுவார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 164/5 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.