பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

கிண்டலடித்த ஆஸி. ரசிகர்களை முறைத்த விராட் கோலி..! (விடியோ)

ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்டில் ஆட்டமிழந்து வெளியேறிய விராட் கோலியை கிண்டலடித்த ஆஸி. ரசிகர்கள்.

கிண்டலடித்த ஆஸி. ரசிகர்களை முறைத்த விராட் கோலி - படங்கள்: எக்ஸ் / பரி

Published On :27 டிசம்பர் 2024, 2:51 pm IST

ஆஸி.க்கு எதிரான் டெஸ்ட்டில் ஆட்டமிழந்து வெளியேறிய கோலியை கிண்டலடித்த ஆஸி. ரசிகர்கள் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று ஆஸி. இளம் அறிமுக வீரர் சாம் கான்ஸ்டாஸை விராட் கோலி தேவையின்றி மோதியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டது.

இதனால் ஆஸ்திரேலிய ஊடகங்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் கோலியை ஃபீல்டிங்கின்போதே கத்தினார்கள்.

இந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் விராட் கோலி 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோலி ஆட்டமிழந்து ஆடுகளத்தினைவிட்டு வெளியேறியபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டனர்.

சிறிதுதூரம் உள்ளே சென்ற விராட் கோலி ஆஸி. ரசிகர்கள் கூச்சலிட்டதும் வெளியே வந்து ரசிகர்களை முறைத்து பார்ப்பார். பின்னர் ஆடுகள பாதுகாவலர் கோலியை அழைத்து சென்றுவிடுவார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2ஆம் நாள் முடிவில் இந்திய அணி 164/5 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.